செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் மீது திராவகம் வீசிய வாலிபர் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்: லோகேஷ் தன்னிடம் மறைத்து வைத்திருந்த திராவகத்தை(ஆசிட்) மோகனபிரியா மீது ஊற்றி விட்டு தப்பி ஓட முயன்றார்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கடை நடத்தி வருபவர் விவேகானந்தன் (வயது 28). இவரது மனைவி மோகனபிரியா(24). மோகனபிரியாவின் சகோதரிக்கும், ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையை சேர்ந்த டிரைவர் லோகேஷ் (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த மோகனபிரியா தனது சகோதரியை கண்டித்தார். இதனால் அவர் லோகேசை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் தன்னிடம் மறைத்து வைத்திருந்த திராவகத்தை(ஆசிட்) மோகனபிரியா மீது ஊற்றி விட்டு தப்பி ஓட முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் லோகேசை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து ஆதம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்