செய்திகள்

தொடர்ந்து 9-வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல் லிட்டர் 43 காசுகள் உயர்ந்து ரூ.79.96-க்கும், டீசல் 51 காசுகள் உயர்ந்து ரூ.72.69-க்கும் விற்பனையாகிறது.

சென்னை:

தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் 43 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 79.96 ரூபாயாகவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 72.69 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்