தமிழக செய்திகள்

ராஜபாளையத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்

ராஜபாளையத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக பஞ்சு மார்க்கெட் நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்றன. தற்போது சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால் புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது அவர் நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து புதிதாக தார்ச்சாலை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் உடனிருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்