தமிழக செய்திகள்

சென்னையில் விசாரணை கைதி தற்கொலை - 3வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு...!

சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கைதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தெலுங்கானாவை சேர்ந்த ராயப்ப ராஜு என்பவர் 48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற தடைசெய்யப்பட்ட போதை பொருளுடன் சிக்கியது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, விசாரணை கைதி ராயப்ப ராஜு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்த குதித்துள்ளார். இதில் படுகாயாம் அடைந்த அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்