தமிழக செய்திகள்

லாரி மீது ஆட்டோ மோதல்

கூடலூரில் நின்றிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

கூடலூர்

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சரக்கு லாரிகள் உள்பட பல்வேறு வாகனங்களும் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாக்கமூலா பகுதியில் சாலையோரம் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து தொரப்பள்ளிக்கு பயணிகளுடன் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. இடைப்பட்ட இடங்களில் பயணிகள் சிலர் இறங்கினர். ஆட்டோவில் டிரைவர் மட்டும் இருந்தார். இந்த சமயத்தில் திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து வேகமாக சென்ற ஆட்டோ சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. முன்னதாக ஆட்டோ டிரைவரும் உஷார் அடைந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். ஆனால் ஆட்டோ பலத்தை சேதம் அடைந்தது. இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தினர். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்