தமிழக செய்திகள்

விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மதுரை,

வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்து விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதிக்கப்பட்டது.

தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இன்று தமிழக அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, கொரோனா தொற்று காலத்தில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு சரியானதே எனவும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்