தமிழக செய்திகள்

நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை- தமிழக அரசு

நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை,

தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் அதனை தடுக்க முயற்சிப்பது கடும் குற்றம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோய் தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம்/ அடக்கம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சம் ஒராண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.