தமிழக செய்திகள்

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, வெள்ளித்திருப்பூர் பகுதி விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.120-க்கும் ஏலம் போனது. பீடா வெற்றிலை ஒரு கட்டு குறைந்தபட்ச விலையாக ரூ.30-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.50-க்கும் ஏலம் போனது. செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு ரூ.17-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்