தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

தினத்தந்தி

திட்டச்சேரி:

திட்டச்சேரி பேரூராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குப்பை இல்லா இந்தியா என்ற இலக்கை அடைய 2 வாரம் தூய்மையே சேவை இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்க தூய்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கி தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு சால்வை அணிவித்து பரிசு பொருட்களை வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். இதில் அலுவலக பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக உதவியாளர் மாதவன் நன்றி கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்