தமிழக செய்திகள்

சிவகங்கை: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு...!

சிவகங்கை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்து உள்ளார்.

தினத்தந்தி

சிவகங்கை,

சிவகங்கை சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குர்மா (வயது 59) .இவரது மனைவி லதா ( 53). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லதா சிவகங்கை பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருந்தார்.

இவர் இன்று காலை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். சிவகங்கை பஸ் நிலையம் அருகில் வரும்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று லதா மீது மோதியது.

இந்த விபத்தில் தலைமை ஆசிரியர் லதா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்