தமிழக செய்திகள்

உள்ளாட்சி இடைத்தேர்தல் நெய்வனை ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு

உள்ளாட்சி இடைத்தேர்தலில் நெய்வனை ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அடுத்த நெய்வனை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வீரமுத்து. இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தார். இதையடுத்து நெய்வனை ஊராட்சிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நெய்வனை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இறந்துபோன வீரமுத்துவின் மனைவியை காத்தாயி உட்பட 5 பேர் போட்டியிட முடிவு செய்து, வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று காத்தாயியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து நெய்வனை ஊராட்சி மன்ற தலைவராக காத்தாயி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட காத்தாயிக்கு உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், நகராட்சி துணைத் தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்