தமிழக செய்திகள்

சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு

பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த ஆலம்பாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் பாலம் ரோடூ வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஆலம்பாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து முடிந்துள்ளன. அந்த பணிகளை சென்னை நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிமுடிந்த சாலைகளில், சிக்னல் போர்டுகள், பஸ் நிறுத்த அடையாள குறிகள் போன்றவை சரியான முறையில் நிறுவ அறிவுரை வழங்கினார். மேலும் பணி முடிக்கப்பட்ட மேம்பாலத்தின் தரம் குறித்தும், செய்யப்பட்ட வேலைகளின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோட்டபொறியாளர் சசிகுமார், உதவி கோட்டபொறியாளர் தாமரைச்செல்வி, உதவி பொறியாளர் கபிலன் உள்பட பலர் இருந்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்