தமிழக செய்திகள்

பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பஸ் நிலைய சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் செல்வம் பணிகளை ஆய்வு செய்தார். தூண்கள் அமைக்கும்போது ஏற்பட்ட பெரிய குழி போன்றவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும், போது குழி தோண்டும்போது ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் மீதமுள்ள தூண்கள் விரைவில் அமைக்கப்படும் என்றும், அதன் பின்னர் பில்லர் அமைக்கும் பணி நடைபெறும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி பொறியாளர்கள் தாமரை, கபிலன் மற்றும் அதிகாரிகள் குழுவினர், நெடுஞ்சாலைதுறையினர் உடன் இருந்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்