தமிழக செய்திகள்

தமிழ்க்கூடல் திருவிழா

மயிலாடுதுறை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் திருவிழா நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாட்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆண்டுக்கு 3 முறை தமிழ்க்கூடல் திருவிழா நடத்திட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை வட்டாரத்தின் முதல் தமிழ்க்கூடல் திருவிழா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பட்டதாரி உதவி தலைமை ஆசிரியை லீலாவதி முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியை லட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன் "தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்' என்ற தலைப்பில் இலக்கிய உரையாற்றினார். மாணவிகள் சார்பில் தமிழின் பெருமை குறித்து சிறப்பாக பேசிய 12-ம் வகுப்பு மாணவி கிருபாவுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முடிவில் தமிழாசிரியர் சுந்தரி நன்றி கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்