தமிழக செய்திகள்

ஆட்டை கொன்று மரத்தில் தொங்க விட்ட சிறுத்தையால் பரபரப்பு....!

கடையம் அருகே ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சியில் மலையில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையடிவாரத்திலுள்ள கிராமத்திற்குள் புகுந்து கால்நடை மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியில் உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பை சேர்ந்தவர் பட்டு. இவர் ஆடு மேய்த்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வீடு திரும்பினார்.

அப்போது அதில் ஒரு பெண் ஆடு காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று மாலை முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை மலை அடிவாரப் பகுதிகளில் அவர் தேடிப்பார்த்த போது ஒரு மரத்தில் ஆடு தொங்கி கொண்டு கிடப்பதை பார்த்து உள்ளார். அப்போது காணாமல் போன தனது பெண் ஆடு என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் நடத்தினர். அப்போது ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை மரத்தில் வைத்து தின்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்