தமிழக செய்திகள்

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு தீர்ப்பு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்துவிட்டு கணவனை காணவில்லை என்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே கடந்த 2021-ம் ஆண்டு பாண்டித்துரை என்பவருக்கும் நந்தினி என்பவருக்கும் திருமணமாகி உள்ளது. திருமணமாகி 88 நாட்களே ஆன நிலையில், மற்றொருவருடன் ஏற்பட்ட தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை நந்தினி கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு, அவரை காணவில்லை என்று நாடகமாடி உள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், துருவி துருவி விசாரித்ததில், நந்தினி உண்மையை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கணவரை கொலை செய்த மனைவி நந்தினியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கோர்ட்டு, நந்தினிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஏழு ஆண்டு கால சிறை தண்டனையுடன் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்