பல்வேறு கட்ட சுற்றுகளுக்கு பிறகு இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளில் கடினமான ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிப்பவர்களுக்கு சாம்பியன்' பட்டமும், பரிசுத்தொகையும் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெல்லிங் பீ போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ போட்டி கடந்த மாதம் தொடங்கியது. பல்வேறு கட்ட சுற்றுகள் காணொலி காட்சி வாயிலாக நடந்து முடிந்த நிலையில் இறுதிகட்ட சுற்று வருகி 8-ந்தேதி நேரடியாக நடைபெற உள்ளது.இந்த நிலையில் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 போட்டியாளர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே இந்திய வம்சாவளியினர் உள்ள நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் இறுதிப்போட்டிக்கு அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் தற்போது தேர்வாகியுள்ளனர். ஸ்பெல்லிங் பீ போட்டியில் தற்போது வரை 26 இந்திய வம்சாவளியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.