உலக செய்திகள்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சி: 2 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நியூயார்க்,

மெக்சிகோ எல்லை வழியாக தங்கள் நாட்டுக்குள் யாரும் சட்ட விரோதமாக நுழைந்து விடாதபடிக்கு அமெரிக்கா தீவிர கண்காணிப்பு பணிக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் அரிசோனா மாநிலத்தில் உள்ள அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைய முயற்சித்த 2 இந்தியர்கள் கடந்த புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். நேற்றுதான் இது குறித்த தகவல்கள் வெளியே கசிந்தன.

அவர்கள் இருவரும் ஆஜோ எல்லை ரோந்து போலீசார்வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவர் சீக்கியர் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர்கள் எந்த மருத்துவ உதவியும் கோரவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்