image credit: ndtv.com 
உலக செய்திகள்

உணவுப் பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்

உணவுப் பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன்,

வளர்ந்து வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற அதே சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என்று ஒரு முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் போரின் விளைவாக உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என்று எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டர் சாண்ட்ஸ் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, "உணவுத் தட்டுப்பாடு இரண்டு வழிகளில் மக்களை பாதிப்புக்கு ஆளாக்குகிறது.ஒன்று, மக்கள் உண்மையில் பட்டினியால் இறக்கும் சோகம். இரண்டாவது, பெரும்பாலும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் மோசமான ஊட்டச்சத்துடன் இருக்கிறார்கள். இந்த ஊட்டச்சத்து குறைபாடு, அவர்களை ஏற்கனவே இருக்கும் நோய்களால் மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது."

"சில புத்தம் புதிய நோய்க்கிருமிகள் தனித்துவமான புதிய அறிகுறிகளுடன் தோன்றுவது போல் உணவுப்பற்றாக்குறை நன்கு வரையறுக்கப்படவில்லை. ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். உணவுப் பற்றாக்குறையின் பின்விளைவுகளுக்குத் தயாராக செயல்படும் வகையில் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த முதலீடு தேவை. இவ்வாறு சாண்ட்ஸ் கூறினார். 

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு