உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது: 4 பேர் மீது வழக்கு பதிவு

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பெரும்பாலான இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சாக்ரோ என்ற நகரில் உள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவிலை ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் சேதப்படுத்தினர். இதையறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் அமைதிகாக்க வேண்டும் என்று சிந்து மாகாண அரசு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்