உலக செய்திகள்

இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

தினத்தந்தி

இஸ்லமாபாத்,

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்து விட்டதாகவும் கூறி, பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தின் தற்காலிக துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய பாகிஸ்தான், அவரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஷக்கோட் செக்டாரில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலில், ஆசியா பிபி என்ற பெண் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கின்றது. எல்லையில் வசிக்கும் கிராமங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்