உலக செய்திகள்

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு

பாக்தாத் விமான நிலைய தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு பெற்ற ராணுவ தளபதி உள்பட 7 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரிலேயே, ஈரான் ஆதரவு ராணுவ தளபதி சுலைமானை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஈரான் ராணுவ தளபதி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீதும் படை வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு ராணுவ தளபதி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் கொடியை பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த பதிவுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்