ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் பாடி அருளிய திருமந்திரம், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.

தினத்தந்தி

திருமூலர் பாடி அருளிய திருமந்திரம், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. அது ஈசனையும், அவனது பண்புகளையும், அவனுள் குடியிருக்கும் அன்பையும் இன்னும் பல செயல்களையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. அந்த திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்..

பாடல்:-

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்

நகையில்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும்

வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை

தகையில்லை தானும் சலம் அதுவாமே..

விளக்கம்:-

ஐந்தெழுந்து மந்திரமான நமசிவாயத்தை ஓதியவர்களுக்கு பகை என்பதே கிடையாது. அவர்களுக்கு பிறரால் இகழப்படும் நிலையும் வராது. ஒவ்வொரு நாளும் நன்மையே உண்டாகும். தொடர்ந்து வரும் வினையும், முதுமையும், எங்கும் எவ்வகையிலும் அவர்களுக்கு தடையாக அமையாது. எங்கும் நறுமணத்தைப் பரப்பும் அந்த மந்திரத்தை ஓதுபவர் சிறப்படைவார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்