ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் பாடிய திருமந்திரம், சிவபெருமானை போற்றும் சைவத்தை மட்டுமில்லாது, வாழ்க்கைக்கு தேவையான பாடத்தையும் கற்றுத் தருகிறது.

தினத்தந்தி

திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம், சைவ நெறிக்கு ஒப்பாக வைத்துப் போற்றப்படும் ஒரு நூல். மூவாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த நூலில், எண்ணிலடங்கா இன்பங்கள் நிறைந்துள்ளன. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

சாண் ஆகத்துள்ளே அழுந்திய மாணிக்கம்

காணும் அளவும் கருத்தறிவார் இல்லை

பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு

மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

விளக்கம்:-

மனித உடலுக்குள் மூலம், கொப்புள், வயிறு, நெஞ்சு, கழுத்து, புருவ மத்தி என்று ஆறு நிலைகளின் இடை இடையே நிலவும் ஒரு சாண் வெளியில் இறைவன் மாணிக்கம் போல் பதிந்துள்ளான். அந்தப் பெருமானை மெய்யுணர்வால் விளங்கிக் கொள்பவர்களுக்கு, அவன் உள்ளம் புகுந்து அருள்புரிவான்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்