கிரிக்கெட்

என்னை நம்பிய ரோகித் சர்மாவுக்கு நன்றி: ஜடேஜா நெகிழ்ச்சி

நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

தினத்தந்தி

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா மிடில் ஆர்டர் பேட்டிங்கில் களமிறங்கி, அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு இது குறித்து ஜடேஜா கூறியதாவது ;

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், ஏனென்றால் அவர் என்னை நம்பினார் மற்றும் நான் எனது நாட்டிற்காக ரன்கள் குவிக்க முடியும் என்று என்னை நம்பினார். எனவே எதிர்காலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவுக்காகா சிறப்பாக விளையாடுவேன் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்