நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை?


நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை?
x
தினத்தந்தி 3 Aug 2018 10:00 PM GMT (Updated: 3 Aug 2018 6:21 PM GMT)

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்தை திடீரென்று நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ராஷ்மிகாவும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. 

இப்போது கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் காதல் காட்சியில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்து இருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இப்படியெல்லாம் நடிக்கலாமா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரை விமர்சித்தனர். 

இந்த நிலையில் ராஷ்மிகா தனது திருமணத்தை திடீரென்று நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. ராஷ்மிகாவின் மானேஜர் ‘‘திருமணம் நின்று போனதாக சொல்வது வதந்திதான்’’ என்று மறுத்து இருக்கிறார். திரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.

Next Story