சென்னையில் வருகிற 14ந்தேதி நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
சென்னையில் வருகிற 14ந்தேதி மாலை நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் கடந்த ஏப்ரல் 28ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இந்த செயற்குழு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என கூறினார். இதேபோன்று நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த கூட்டத்தில் தேர்தல் பற்றிய ஆலோசனையே முக்கிய விசயமாக இருந்தது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மிகவிரைவில் நியமிக்கப்படுவார். தேர்தல் தேதியை அவர் அறிவித்திடுவார்.
நாளை முதல் தேர்தல் வேலைகள் நடைபெறும். இதேபோன்று நடிகர் சங்க கட்டிட வேலைகளை முடிக்க கடும் முயற்சிகள் செய்து வருகிறோம் என கூறினார். இந்த நிலையில், வருகிற 14ந்தேதி மாலை நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story