நடிகைகளின் குட்டை உடையால் பாலியல் குற்றங்களா? -ஸ்ரீரெட்டி


நடிகைகளின் குட்டை உடையால் பாலியல் குற்றங்களா? -ஸ்ரீரெட்டி
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 5:53 PM GMT)

தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக கண்டித்துள்ளார்.

சினிமா துறையில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சி அளித்தது. இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த காமுகர்களுக்கு பயம் வரும். சினிமாவில் குட்டை உடைகள் அணியும் நடிகைகளை எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.

நடிகைகள் குட்டை உடை அணிந்து ஆண்கள் உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்கள் மனதை கெடுக்கின்றனர் என்றும், அதனால்தான் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன என்றும் ஆவேசப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு நடிகைகள் குட்டை உடைகள் அணிவதுதான் காரணம் என்று பேசி சினிமாவை சாடுகின்றனர்.

ஆனால் இந்த 9 மாத குழந்தை அவனுக்கு என்ன உணர்வை தூண்டி இருக்கும். குழந்தை அணிந்த உடையில் என்ன குறை இருந்தது. அவனுக்கு எப்படி செக்ஸ் ஆசை ஏற்பட்டது. நடிகைகளை குறை சொல்பவர்கள் இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்பவர்களை நடுரோட்டில் நிறுத்தி அரசு சுட்டுத்தள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் பெண்களும், குழந்தைகளும் சமூகத்தில் பாதுகாப்பாக வாழ முடியும்.”

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

Next Story