"இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு


இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு
x
தினத்தந்தி 16 Sep 2019 1:08 PM GMT (Updated: 16 Sep 2019 1:08 PM GMT)

இந்தி மொழி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தி மொழியை திணிப்பதற்கு தமிழகத்தில் எப்போதுமே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தி தினத்தையொட்டி பாரதீய ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்றும் அதில் அவர் கூறி உள்ளார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில்,  இந்தி மொழி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தாய்மொழிக்கும் தேசிய மொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தி பொது மொழியாக பேசப்பட்டு வருவதால் இந்திய மக்கள் இணைவதற்கு இந்தி வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பள்ளி செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது போல் எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் இந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story