விஜய்சேதுபதி-மேகா ஆகாஷ் ஜோடியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர்
விஜய்சேதுபதியும், மேகா ஆகாசும் முதன்முதலாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
மகிழ்திருமேனி, கனிகா, ரித்விகா, சிவரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக் கிறார்கள். இவர்களுடன் ஒரு ஜெர்மன் நாட்டு பெண்ணும் கதாநாயகியாக நடிக்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு பழனி, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.
பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களில் எஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய திரைக்கதை, இது. சர்வதேச அளவிலான ஒரு பிரச்சினை பற்றியும் படம் பேசும். இதில், விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இசக்கி துரை தயார்க்கிறார். இணை தயாரிப்பு: ஆர்.கே.அஜய்குமார்.
Related Tags :
Next Story