கொரோனா: மே மாதம் முடிவில் விடிவு கிடைக்கலாம்; நமக்கும் வாய்ப்பு இருக்கு - நடிகர் விவேக்
மே மாதம் முடிவில் விடிவு கிடைக்கலாம், நமக்கும் வாய்ப்பு இருக்கு என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுக்குள் வந்த பாடில்லை. இந்தியாவில் கொரோனா
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது.பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வுக்காக புதிய வீடியோ ஒன்றை நடிகர் விவேக் டுவிட்டரில்வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது ;
மக்களே அன்புள்ள இளைஞர்களே..தமிழகத்தை சார்ந்த அனைத்து நண்பர்கள். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இப்ப முழுமையான ஊரடங்கு அறிவிச்சிருக்காங்க. இந்த தொற்று குறைஞ்சு, ஸீரோ கேசஸ்னு வரணும். அப்பதான் நாமளும் அதுல இருந்து வெளிய வர உதவும்.
அது நம்ம கையிலதான் இருக்கு. நாம இனி மேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் செய்யணும். சிங்கப்பூர்ல இருந்த வந்த லேட்டஸ்ட் ஆய்வின்படி, மே மாத இறுதியில இதுக்கு ஒரு விடிவு கிடைக்கலாம்னு சொல்றாங்க, உலகத்துக்கே. நமக்கும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு, நாம் தமிழக அரசுடனும் இந்திய அரசுடனும் ஒத்துழைத்தால் நன்றி.
இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
நன்றி @jayatvdottvhttps://t.co/xXEj833E0O
— Vivekh actor (@Actor_Vivek) April 27, 2020
Related Tags :
Next Story