‘தெய்வமகள்’ சத்யாவும், ‘ஓ மை கடவுளே’ மீராவும்...
நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன் என நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில், கன்னக்குழி அழகி என்று பாராட்டப்படுபவர்கள் அபூர்வம். அப்படி பாராட்டப்படும் வசீகர அழகிகள் பட்டியலில், ‘லேட்டஸ்ட்’ ஆக இடம் பிடித்து இருப்பவர், வாணி போஜன். ‘தெய்வமகள்’ என்ற டி.வி. தொடரில், ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ‘சின்னத்திரை’ ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இவருடைய ‘மீரா’ கதாபாத்திரத்தை இன்னும் நினைவில் வைத்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
“சின்னத்திரையில் குடும்பப்பாங்காக நடித்த உங்களுக்கு சினிமாவில் கவர்ச்சிகரமான வேடம் வந்தால்...?” என்ற கேள்விக்கு, ‘’கவர்ச்சி எனக்கு பொருந்துமா? என்று தெரியவில்லை. இதுவரை எனக்கு கிளாமர் ரோல்கள் வரவில்லை” என்றார், வாணி போஜன்.
“இங்கே புதுமுக கதாநாயகிகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறார்களே..போட்டியை எப்படி சமாளிப்பீர்கள்?”
“நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், கூட்டத்தில் காணாமல் போய்விட மாட்டோம். நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.”
“முகம் அழகாக இருக்க என்ன செய்கிறீர்கள்?”
“மனதை அழகாக வைத்துக் கொள்கிறேன்” என்று சிரித்தார், வாணி போஜன்.
Related Tags :
Next Story