விஷாலுக்கு 30; ஆர்யாவுக்கு 32 மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்


விஷாலுக்கு 30; ஆர்யாவுக்கு 32 மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்
x
தினத்தந்தி 7 Nov 2020 10:00 PM GMT (Updated: 8 Nov 2020 1:50 AM GMT)

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இது, விஷாலுக்கு 30-வது படம். ஆர்யாவுக்கு 32-வது படமாகும்.

விஷாலும், ஆர்யாவும் ‘அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இருவரும் அண்ணன்-தம்பியாக நடித்தனர். அந்த படத்தை பாலா டைரக்டு செய்தார். 9 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி, மிர்ணாளினி.

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், விஷால்-ஆர்யாவை வைத்து தனது 4-வது படத்தை இயக்குகிறார். எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே லென்ஸ், வெள்ளை யானை, திட்டம் இரண்டு ஆகிய படங்களை தயாரித்தவர்.

இது, விஷாலுக்கு 30-வது படம். ஆர்யாவுக்கு 32-வது படம். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிவடைந்தது.

Next Story