அடுக்குமாடி குடுயிருப்பில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்


அடுக்குமாடி குடுயிருப்பில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 23 Jan 2021 10:59 AM GMT (Updated: 23 Jan 2021 10:59 AM GMT)

அடுக்குமாடி குடுயிருப்பில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மனைவியின் விவாகரத்து, நிதி இழப்புகளால் போதைக்கு அடிமையாகி மீண்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை கோட்டூர் புரத்தில் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் வீட்டில் அதிகாலையில் அதிகளவும் சந்தம் வந்ததாகவும், இது குறித்து கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்,  சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் புகார் காவல்துறை கூடுதல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலர் அடுக்குமாடி குடுயிருப்பில் வசித்து வரும் நிலையில், விஷ்ணு விஷாலின் செயல்  தொந்தரவு அளிப்பதாகவும்,  நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள்,  விஷ்ணு விஷால் வீட்டிற்கு வந்து செல்வதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் மீது குடியிருப்புவாசிகள் போலீசாரிடம் புகார் அளித்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story