நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில்


நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில்
x
தினத்தந்தி 30 Jun 2021 1:58 AM GMT (Updated: 30 Jun 2021 1:58 AM GMT)

சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜூன் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ராகவேந்திரர் கோவிலை கட்டி உள்ளார். நடிகர் அர்ஜூனும் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை நிர்மாணித்து உள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பதுபோன்று சிலையை வடித்து. 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர். 

பின்னர் விசேஷ பூஜைகள் செய்து பெரிய கிரேன் மூலம் அந்த சிலை சாமி பீடத்தில் அமர்த்தப்பட்டது. உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவிலாக இதனை உருவாக்கி வருவதாகவும் கோவிலின் உள் பிரகாரம், வெளிபிரகாரம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன என்றும் அர்ஜூன் தெரிவித்து இருந்தார். பல வருடங்களாக நடந்த கோவில் கட்டும் பணி தற்போது முடிந்துள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

Next Story