வடிவேல் விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி?


வடிவேல் விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி?
x
தினத்தந்தி 29 Aug 2021 9:29 AM GMT (Updated: 29 Aug 2021 9:29 AM GMT)

டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேல் நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார்.

கதாநாயகனாக வடிவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பளமாக ரூ.12 கோடி பேசப்பட்டதாகவும், அதற்கு ‘அட்வான்ஸ்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. திடீரென்று அந்த படத்தில் இருந்து வடிவேல் நடிக்க மறுத்து விலகினார். இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் செய்தார். இதனால் வடிவேல் புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேல் வாங்கிய ‘அட்வான்ஸ்’ தொகை ரூ.5 கோடியை ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. வடிவேல் கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால் பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக முடிந்ததாக கூறப்படுகிறது. இனிமேல் வடிவேல் நடிக்க தடை எதுவும் இல்லை.

Next Story