வாடகைத் தாய் மூலம் நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு இரட்டைக்குழந்தை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Nov 2021 10:53 AM GMT (Updated: 18 Nov 2021 10:53 AM GMT)

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார்.

மும்பை, 

இந்தியில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரீத்தி ஜிந்தா. இவர், தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்திருந்தார். 

 அமெரிக்காவைச் சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான, ஜென் குட்எனக் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளனர். இதனை பிரீத்தி ஜிந்தா தன்னுடைய டுவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம், இன்று நான் ஒரு அற்புதமான செய்திகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட்எனப் மற்றும் கியா ஜிந்தா குட்எனப் ஆகியோர் புதிதாக எங்கள் குடுமபத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் வரவால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். இதற்காக டாக்டர்கள் மற்றும் வாடகைத் தாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Next Story