'பூமி அனைவருக்குமானது; எந்த வகையிலும் வேற்றுமையை ஏற்க முடியாது' - நடிகர் விஜய் சேதுபதி


பூமி அனைவருக்குமானது; எந்த வகையிலும் வேற்றுமையை ஏற்க முடியாது - நடிகர் விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 30 March 2023 2:48 PM GMT (Updated: 30 March 2023 3:53 PM GMT)

வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி இன்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், "எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.


Next Story