பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: கங்கனா ரனாவத்- சோனம் கபூருக்கு இடையில் மோதல்


பாலியல் துன்புறுத்தல் விவகாரம்:  கங்கனா ரனாவத்- சோனம் கபூருக்கு இடையில்  மோதல்
x
தினத்தந்தி 8 Oct 2018 9:32 AM GMT (Updated: 8 Oct 2018 9:32 AM GMT)

பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக நடிகைகள் கங்கனா ரனாவத்- சோனம் கபூருக்கு இடையில் மோதல் உருவாகி உள்ளது. #MeToo #KanganaRanaut

மும்பை

தனுஸ்ரீ தத்தா  நடிகர் நான படேகர் மீது  அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து   இது போன்ற பாலியல் துன்பறுத்தல்களால் பாதிக்கபட்ட  பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை வெளியிட தொடங்கி உள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். விகாஸ் பகால் இயக்கிய அந்தப் படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில், ஒவ்வொரு முறை தன்னை விகாஸ் பகால் சந்திக்கும்போதும், அவரது பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் மீது ஏற்கனவே பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாகவும், அவருக்கு ஆதரவாக தான் செயல்பட்டதால், தனக்கு அளித்த பட வாய்ப்பை ரத்து செய்துவிட்டதாகவும் ரனாவத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த பிரச்சினை இப்போது முற்றிலும் மாறுபட்ட சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளது.

பெங்களூருவில் வோக் நாம் மகளிர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய போது, சோனம் கபூர், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக   பேசுவதில் தைரியம் காட்டுவதற்காக தனுஸ்ரீயை பாராட்டினார்.

சோனம் கபூர், கங்கனா மீடு கதை குறித்து கூறும் போது அவர் சில நேரங்களில் நடிகையை  தீவிரமாக எடுத்துக் கொள்வது கடினம் என்று அவர் சொன்னார். 

சோனம் கபூர் கூறியதாவது;-

கங்கனா ஏதோ எழுதினார் என்று நான் நினைக்கிறேன். அவர் நிறைய விஷயங்களைச் சொல்கிறார், சில சமயங்களில் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்வது கடினம்.  நான் அவர் கன்னத்தில் முத்தமிட்டேன், அவர் என்ன நம்புகிறாள் என்று கூறுகிறேன். நான் உண்மையில் அதை மதிக்கிறேன்.  எனக்கு அவரை தெரியாது, எனக்கு  அவர் நிலைமை தெரியாது.எழுதப்பட்டவை என்ன என்றால், அது அருவருப்பானது மற்றும் பரிதாபமானது. அது உண்மையாக இருந்தால், அதற்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறினார்

சோனம் கபூரின் இந்த  பேச்சு குறித்து கங்கனா ரனாவத்  பிங்க்வில்லா இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"கங்கனாவை நம்புவது கடினமா? நான் என் மீடு  கதையைப் பகிர்ந்துகொள்கிறேன், யார் எனக்கு நியாயம் கற்பிப்பது? சோனம் கபூர் சில பெண்களை நம்புவதற்கு உரிமம் பெற்றிருக்கிறார், சிலரை அவர் விரும்பமாட்டார்.

என் கோரிக்கைகளை அவருக்குத் தெரியாதா என்ன? நான் ஒரு பிரம்மாண்டமான நபர் என்று எனக்கு தெரியும் மற்றும் நான் பல சர்வதேச உச்சி மாநாடுகளில் என் நாட்டின் சார்பில் பங்கேற்று உள்ளேன்.  இந்த உச்சிமாநாட்டிற்கு ஒரு சிந்தனை மற்றும் இளைஞன் செல்வாக்கு செலுத்துபவர் என நான் அழைக்கப்படுகிறேன்.
என கூறினார்.

கங்கனா, உண்மையில் நிப்போடிசம் போன்ற பிரச்சினைகளை எழுப்பினார் சோனியாவின் நடிப்பு திறன்களை கூட கேள்வி எழுப்பினார். அனைத்து சினிமாவை சேர்ந்தவர்களையும் அவர்  காயபடுத்தியதாக கூறினார்.

Next Story