ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்கள் இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
ஜெய்ப்பூரில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில், அதிகபட்சமாக பார்த்தீவ் பட்டேல் 41 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். விராட்கோலி 23 ரன்கள், ஸ்டோனிஸ் 31 ரன்கள், மொயின் அலி 18 டிவில்லியர்ஸ் 13 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
Related Tags :
Next Story