துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா


துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Sep 2020 6:07 AM GMT (Updated: 3 Sep 2020 6:07 AM GMT)

துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சென்னை அணி வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அணியின் அகாடமியில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story