ஐபிஎல் : அடுத்தடுத்து கேட்ச்களை தவறவிட்ட ஜடேஜா - அப்ரிடியை கிண்டல் செய்த அமித் மிஸ்ரா..!!


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 21 April 2022 5:02 PM GMT (Updated: 21 April 2022 5:02 PM GMT)

மும்பை அணியின் ஹ்ரித்திக் கொடுத்த எளிதான கேட்சை ஜடேஜா தவறவிட்டார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும்  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் திலக் வர்மாவின்  அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் மும்பை அணியின் பேட்டிங் போது சென்னை அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த ஃபீல்டராக கருதப்படும் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 2 முறை கேட்ச்களை தவறவிட்டார்.

அதிலும் குறிப்பாக 12-வது ஓவரில் மும்பை அணியின் ஹ்ரித்திக் கொடுத்த எளிதான கேட்சை ஜடேஜா தவறவிட்டார். ஜடேஜாவை தொடர்ந்து சிவம் துபே ஒரு கேட்சை தவறவிட்டார். அணியின் விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டார். 

இந்த நிலையில் ஜடேஜா தவறவிட்ட கேட்சிற்கு அமித் மிஸ்ரா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடியை கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்து அமித் மிஸ்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " ஜடேஜா கேட்ச்களை தவறவிடுவதும் , டோனி ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிடுவதும் ஷஹீத் அப்ரிடி கண்களை திறந்து விவேகத்துடன் பேட்டிங் ஆடுவது போன்றது. யாராலும் நம்பமுடியவில்லை " என பதிவிட்டுள்ளார்.

Next Story