ஆலங்குளம் அருகே வாகனம் மோதி குரங்கு சாவு
ஆலங்குளம் அருகே வாகனம் மோதி குரங்கு சாவு
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே ராமர் கோவில் மலை உள்ளது. அங்குள்ள காட்டுப்பகுதியில் மான்கள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அங்கிருந்து ஒரு குரங்கு தென்காசி- நெல்லை மெயின்ரோடு பகுதிக்கு வந்துவிட்டது. அங்கு சாலையை கடந்த போது ஒரு வாகனம் மோதி அந்த குரங்கு பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்தும் ஆலங்குளம் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். குரங்கின் உடலை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். குரங்கின் மீது மோதிய வாகனம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம் அருகே ராமர் கோவில் மலை உள்ளது. அங்குள்ள காட்டுப்பகுதியில் மான்கள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அங்கிருந்து ஒரு குரங்கு தென்காசி- நெல்லை மெயின்ரோடு பகுதிக்கு வந்துவிட்டது. அங்கு சாலையை கடந்த போது ஒரு வாகனம் மோதி அந்த குரங்கு பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்தும் ஆலங்குளம் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். குரங்கின் உடலை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். குரங்கின் மீது மோதிய வாகனம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story