தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்- சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்- சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 30 Jan 2017 10:30 PM GMT (Updated: 30 Jan 2017 5:21 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்- சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

சத்துணவு அமைப்பாளர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில், எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் காலிபணியிடங்களாக உள்ள 362 பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கும், 672 சமையல் உதவியாளர்் பணியிடங்களுக்கும் நேரடி நியமனம் மூலம் நியமிக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலிபணியிடங்களாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு இதற்கென நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஆதிதிராவிடர்கள் 10-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்கலாம். சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஆதி திராவிடர்கள் 5-ம் வகுப்பும் தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்கலாம். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்.

வருகிற 15-ந்தேதி (புதன் கிழமை) மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையர்கள் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன்னரே விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக, (சத்துணவு பிரிவு) தகவல் பலகைகளிலும் காலிபணியிட விவரம் மற்றும் இனச்சுழற்சி விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதிச்சான்றிதழ், குடியிருப்புச் சான்று, வயது சான்றிதழ், சாதி சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் இருப்பின் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங் களில் நேரிலோ (அல்லது) தபால் மூலமாகவோ கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல்

இதன் அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் மூலமாக நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப் படும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story