விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி மயிலாடுதுறை கோர்ட்டு நடவடிக்கை


விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி மயிலாடுதுறை கோர்ட்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2017 10:15 PM GMT (Updated: 3 Feb 2017 6:37 PM GMT)

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் மயிலாடுதுறை கோர்ட்டு நடவடிக்கையின்பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை,

அரசு பஸ் ஜப்தி

மயிலாடுதுறையில் அருகே மூவலூர் மகாதானபுரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 70). இவர் கடந்த 25.12.2011 அன்று கும்பகோணம் மெயின் ரோட்டில் மகாதானபுரம் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் தங்கராசு மீது மோதியது. இந்த விபத்தில் தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை கோர்ட்டில் கடந்த 18.1.2012 அன்று தங்கராசின் மனைவி வைரம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த கூடுதல் சார்பு நீதிபதி ஆனந்தன், கடந்த 21.2.2014 அன்று ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இதனால் கடந்த 21.12.2015 அன்று நிறைவேற்று மனு தாக்கல் செய்ததையொட்டி வட்டியுடன் ரூ. 3 லட்சத்து 83 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரை ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன் பேரில் கோர்ட்டு ஊழியர், வக்கீல் சிவதாஸ் ஆகியோர் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.


Next Story