யூனியன் அலுவலகம் முற்றுகை
யூனியன் அலுவலகம் முற்றுகை
களக்காடு,
களக்காடு யூனியன் கீழக்கருவேலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டார்குளம் பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்களும் பழுதடைந்ததால் அவைகளில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் குடிநீர் சீராக வழங்கக்கோரி, கட்டார்குளம் கிராம மக்கள் நேற்று களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தர்ராஜன், பிளாரன்ஸ் விமலா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்கள் உடனடியாக சீரமைக்கப்படும் என்றும், தாமிரபரணி கூட்டு குடிநீர் கிடைக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
களக்காடு யூனியன் கீழக்கருவேலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டார்குளம் பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்களும் பழுதடைந்ததால் அவைகளில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் குடிநீர் சீராக வழங்கக்கோரி, கட்டார்குளம் கிராம மக்கள் நேற்று களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தர்ராஜன், பிளாரன்ஸ் விமலா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்கள் உடனடியாக சீரமைக்கப்படும் என்றும், தாமிரபரணி கூட்டு குடிநீர் கிடைக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story