செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் திடீரென புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
செங்கல்பட்டு,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் திடீரென புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story