லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது


லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது
x
தினத்தந்தி 24 April 2017 8:30 PM GMT (Updated: 24 April 2017 7:06 PM GMT)

சிட்லபாக்கத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம்,

சிட்லபாக்கம் பகுதியில் தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் சிட்லபாக்கம் ராதாநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் குரோம்பேட்டை, பாரதிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த
15 துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Next Story