பொள்ளாச்சியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 May 2018 11:43 PM GMT (Updated: 15 May 2018 11:43 PM GMT)

பொள்ளாச்சியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி,

மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு,கூட்டமைப்பு அமைப்பாளர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கனகராஜ் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக வெளியீட்டுசெயலாளர் மனோகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விடகூடுதலாக பல மடங்குகல்விக் கட்டணத்தைவசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச கட்டாயக் கல்விஉரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும். அரசால் அங்கீகரிக்கப்படாத பாட புத்தகங்களைவைத்து மாணவர்களுக்குபாடம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப்பட்டியல் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அரசின் கல்வி கட்டணப்பட்டியலை பெற்றோர், மாணவர்கள் பார்க்கும் வகையில், பள்ளியின் முகப்பில் வைக்காத தனியார்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பொள்ளாச்சி தி.மு.க.நகர துணைசெயலாளர் கார்த்திகேயன், ம.தி.மு.க.நகர செயலாளர் துரைபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிசுப்பிரமணியம், ஆதித்தமிழர் பேரவைகோபால், மனிதநேய மக்கள்கட்சி ஷேக் அப்துல்லா, எஸ்.டி.பி.ஐ.அக்பர் அலி உள்படபல கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

Next Story