அரசு பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் பலி; 7 பயணிகள் காயம்


அரசு பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் பலி; 7 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 19 May 2018 10:30 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

அரியலூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் லாரி டிரைவர் பலியானார். 7 பயணிகள் காயம் அடைந்தனர்.

தாமரைக்குளம்,

சேலத்தில் இருந்து தஞ்சாவூரை நோக்கி ஒரு அரசு பஸ் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, பஸ் மீது மோதியது.

தொடர்ந்து லாரி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஈரோடு மாவட்டம் கரட்டு பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (வயது 30) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 7 பேர் காயமடைந்தனர்.

விசாரணை

இது குறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் பலியான கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story